Breaking News
Loading...
Thursday, September 26, 2013

Info Post
ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி பிரியாணி செய்து, பரிமாறுவதோடு அஜித்தின் அன்பு நிறைவடையவில்லை.

தன்னையே நம்பி உடன் இருக்கும் ஊழியர்களுக்கு என்ன செய்யலாம் என்று சீரியஸாக யோசித்திருக்கிறார் அஜித்.

இதுதான் சரியாக இருக்கும் என்று கடைசியில் ஒரு மகத்தான செயலைத் தேர்ந்தெடுத்தார்.

தன்னுடன் நீண்டகாலமாக இருக்கும் 10 ஊழியர்களுக்கு, வீடு கட்டித் தருகிறார். சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 பேருக்கும் அரை கிரவுண்டு நிலத்தைக் கொடுத்திருக்கிறார்.

கேளம்பாக்கத்தில் வாங்கிய அந்த நிலங்களை ஊழியர்கள் பெயரிலேயே பத்திரப்பதிவும் செய்திருக்கிறாராம். வீடு கட்டுவதற்கும் நிதி உதவி அளிக்கிறாராம் 'தல'. யார் நல்லது செய்தலும் பாராட்டுவதே நம் பண்பு. நடிகர்களின் படங்களுக்கு பாலூற்றும் ரசிகர்கள் இதுபோன்று இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுவே அவர்கள் நேசிக்கும் நடிகர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். விசிறிகள் சிந்திப்பார்களா.

நன்றி : விகடன்

0 comments:

Post a Comment

Popular Posts