Breaking News
Loading...
Wednesday, October 30, 2013

Info Post

'ஆரம்பம்' படத்துக்கு தடையா?

அஜித் ரசிகர்கள் ஊர் முழுக்க வைத்திருக்கும் பேனர்களே ஆரம்பம் ரிலீஸுக்கு சாட்சி. நாளை(31.10.13) 'ஆரம்பம்' திரைப்படம் ரிலீஸ் என்பதை படம் எடுத்தவர்கள் யாரும் விளம்பரப்படுத்த தேவையில்லை.

பலதரப்பட்ட திட்டங்களுடன் ஆரம்பம் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களின் மகிழ்ச்சியை பாதிக்கும் விதத்தில் இயக்குனர் கே.கண்ணன் என்பவர் ஆரம்பம் திரைப்படத்தின் மீது சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.

அவரது புகாரில் "கடந்த ஏப்ரல் 3 2013 அன்று நான்'இனி தான் ஆரம்பம்' என்ற டைட்டிலை என் பெயரில் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அஜித் படத்திற்கு அதே மாதிரியான டைட்டிலை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே ஆரம்பம் படத்தின் டைட்டில் மீது தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறாராம்.

'ஆரம்பம் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இத்தனை மாதங்களுக்குப் பிறகு ஏன் புகார் கொடுத்து தடை கேட்க வேண்டும். இத்தனை நாட்கள் என்ன செய்துகொண்டிருந்தார்' என அஜித் ரசிகர்களும், திரையுலக முக்கியஸ்தர்களும் டுவிட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

shared via

0 comments:

Post a Comment

Popular Posts